/indian-express-tamil/media/media_files/2025/09/15/whatsapp-image-2025-09-15-a-2025-09-15-15-08-30.jpg)
"ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தின் கீழ் கழகத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பங்கள், பேரறிஞர் அண்ணாவின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி அகதீஸ்வரம் பகுதியில், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்!” எனும் உறுதிமொழியை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் எடுத்தனர்.
முன்னதாக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.