'திராவிட நாகரீகத்தின் தொட்டில் கீழடி' - அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டபின் ஸ்டாலின் பேட்டி

கீழடிக்குப் பிறகு ஆய்வு தொடங்கப்பட்ட சனோலி என்கிற பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, குஜராத் மாநிலத்தின் வாட் பகுதியும் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

கீழடிக்குப் பிறகு ஆய்வு தொடங்கப்பட்ட சனோலி என்கிற பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, குஜராத் மாநிலத்தின் வாட் பகுதியும் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
keezhadi, tn budget

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்றுவரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் சி.பி.எம் எம்.பி., சு.வெங்கடேசன் மற்றும் தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர்.

Advertisment

கீழடியில் ஆய்வு மேற்கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை பறைசாற்றும் விதமாக கீழடி உள்ளது. இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடிய தொல்லியல் துறை அதிகாரிகள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் போன்றே இந்த முயற்சி தொடரவேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் இனிமேல் தான் அதிகமான கவனத்தைச் செலுத்தி இதில் ஈடுபடவேண்டும். இந்த ஆய்வில் கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்களின் நாகரிகம் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை ஓடுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment
Advertisements

கீழடியில் ஸ்டாலின்

கீழடிக்குப் பிறகு ஆய்வு தொடங்கப்பட்ட சனோலி என்கிற பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, குஜராத் மாநிலத்தின் வாட் பகுதியும் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கீழடியிலும் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும்.

கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன்னாள் தி.மு.க எம்.பி., கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் ஆகிய மூவரும், கீழடியில் இருக்கக்கூடிய பிரச்னைகளையெல்லாம் மத்திய இணை அமைச்சரிடம் எடுத்துரைத்திருக்கிறார்கள். ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தொடரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தான் தொடங்கப்படவேண்டும் என பல அறிஞர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஆனால், இப்போது அந்த வரலாறு குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்படவேண்டும் என கீழடி மூலம் தெளிவாகியிருக்கிறது.

எனவே, நம் பண்பாடு காப்பாற்றப்படவேண்டும்; நம் கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும். இந்த முயற்சியிலே மத்திய அரசும், மாநில அரசும் ஈடுபட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Mk Stalin Keeladi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: