Advertisment

’இந்தாங்க அல்வா’… மத்திய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா வழங்கிய தி.மு.கவினர்

மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

தமிழ்நாட்டில் சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி தீவிரமான மழை பெய்தது. இதைத்தொடர்ந்து 17, 18ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசியில் கடுமையாக மழை பெய்தது. இது பல லட்சம் மக்களை பாதித்தது.

இந்நிலையில் இதை தேசிய பேரிடராக அறிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. நிர்மல சீதாராமன் அப்படி அறிவிக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த பாதிப்புகளுக்கு மத்திய அரசு 37,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்தது.

ஆனால் மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை இந்நிலையில் திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். அதன்படி நெல்லையில்  தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்தனர்.

சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள அனைவருக்கும் அல்வா கொடுத்தனர். அந்த அல்வாவோடு இணைக்கப்பட்ட நோட்டீஸில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ’சீரோ’ என்று எழுதப்பட்டுள்ளது. இதுபோல திருநெல்வேலியும் வழங்கப்பட்டது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment