Chennai News Live Updates: தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம்

Tamil Nadu Latest Live News Update in Tamil 20 august 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest Live News Update in Tamil 20 august 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court

Today Latest Live News Update in Tamil 20 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஸ்டாலின்திருமணநாள்வாழ்த்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - துர்கா ஸ்டாலினின் 50 ஆவது திருமண நாளையொட்டி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

  • Aug 20, 2025 11:36 IST

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு அளித்தார்



  • Aug 20, 2025 11:11 IST

    தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்க விதிகள் வெளியீடு

    தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்க விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டு இனங்களில் மட்டுமே, இயற்கை முறையிலான மாட்டினப்பெருக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். விந்து நிலையங்கள், அதில் பயன்படுத்தப்படும் காளைகள், இனப்பெருக்க தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் ஆகியோர் பதிவு செய்ய வேண்டும்.



  • Advertisment
    Advertisements
  • Aug 20, 2025 11:03 IST

    ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம். சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Aug 20, 2025 11:01 IST

    புதிய சட்டத்துக்கு காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா கண்டனம்!

    30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை பறிக்க வகை செய்யும் மசோதா கொடூரமானது என காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள மசோதாவை கடுமையாக எதிர்ப்போம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பாஜக தங்கள் வசதிக்கு எப்படி பயன்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே என்று கூறியுள்ளார்.



  • Aug 20, 2025 11:00 IST

    தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம்

    தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. மாநகராட்சியுடன் தமிழ்நாடு அரசு கலந்து பேசி தூய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை தர வேண்டும் என கூறிய நீதிமன்றம், தூய்மைப் பணியை தனியாருக்கு தரும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்தது.



  • Aug 20, 2025 10:51 IST

    மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்

    மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம். ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப்பூர்மான விளக்கம் அளிக்கலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 



  • Aug 20, 2025 10:27 IST

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா| மீது சரமாரித் தாக்குதல்

    அவரது வீட்டில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் முதலமைச்சரை அறைந்து, முடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. குற்றத்தில் ஈடுபட்டவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. 



  • Aug 20, 2025 10:05 IST

    தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைவு!

    தங்கம் விலை ஒரு சவரன் ரூ.73,440 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.55ம் சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.

     



  • Aug 20, 2025 10:04 IST

    நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    செங்கல்பட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் நடனமாடிய பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகிழ்ச்சியுடன் நடனமாடி கொண்டிருந்த நிலையில் மேடையில் உயிர் பிரிந்தது.



  • Aug 20, 2025 09:31 IST

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல்

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் முதலமைச்சரை கடுமையாக தாக்கினார். இதில் முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

     



  • Aug 20, 2025 09:27 IST

    மாநாட்டுத் திடலில் தவெகவினர் சிறப்பு பூஜை

    தவெக 2ஆவது மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டுத் திடலில் தவெகவினர் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பூஜையில் பங்கேற்றனர்.

     



  • Aug 20, 2025 08:53 IST

    ராமலிங்கம் கொலை வழக்கு - என்.ஐ.ஏ 10 இடங்களில் சோதனை

    ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானலில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட 8 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டுள்ளது.



  • Aug 20, 2025 08:51 IST

    மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்

    ஒன்றிய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியல் சண்டைகளுக்கு இ.டி பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகளைக் குறிவைக்க இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். 



  • Aug 20, 2025 08:45 IST

    பிட்புல் நாய் கடித்து ஒரு பலியான சம்பவம்

    சென்னையில் பிட்புல் நாய் கடித்து கருணாகரன் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில் நாயின் உரிமையாளர் பூங்கொடி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தல் முறையாக விலங்குகளை கையாளாமல் இருந்தது தொடர்பான பிரிவுகளில் குமரன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

     



  • Aug 20, 2025 08:19 IST

    புத்துயிர் பெறும் இந்தியா - சீனா உறவு.. 12 உடன்படிக்கைகளில் கையெழுத்து!

    இந்தியா - சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் எல்லை வர்த்தகம் திறத்தல், பிரிக்ஸ் மாநாட்டின் தலைமைக்கு ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் உள்ளிட்ட 12 உடன்படிக்கைகளை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியா வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Aug 20, 2025 08:09 IST

    பேருந்தை மீட்க முயன்ற கிரேன் கவிழ்ந்து விபத்து

    பரமக்குடி அருகே அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதி 22 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்தை மீட்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்து விபத்தில் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



  • Aug 20, 2025 08:08 IST

    நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

    பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் சூதாட்ட தளங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Aug 20, 2025 08:07 IST

    தமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

    திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல் பேஹம்பூர் அருகே எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி ஷேக் அப்துல்லா வீட்டிலும் என்..அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

     



  • Aug 20, 2025 07:38 IST

    மேட்டூர் அணை நடப்பாண்டில் 5வது முறையாக அதன் முழு கொள்ளளவை (120 அடி) எட்டியது

    சேலம் மேட்டூர் அணை நடப்பாண்டில் 5வது முறையாக அதன் முழு கொள்ளளவை (120 அடி) எட்டியது. நீர்வரத்து 1.16 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் 90,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     



  • Aug 20, 2025 07:36 IST

    5-வது முறையாக நிரம்பியது

    நீர்வரத்து அதிகரிப்பால் நடப்பாண்டில் 5-வது முறையாக மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியது. நீர்வரத்து 1,16,683 கன அடியாக அதிகரித்துள்ளதால், 90,000 கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.



  • Aug 20, 2025 07:35 IST

    சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்

    முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் கொண்டுவர மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகம் செய்கிறார்.



  • Aug 20, 2025 07:34 IST

    அதிமுக யாருக்கும் அடிமையில்லை - ஈபிஎஸ்

    அதிமுக யாருக்கும் அடிமையில்லை என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார். பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் அந்தர்பல்டி அடிப்பது திமுக தான் எனவும் விமர்சித்துள்ளார்.



  • Aug 20, 2025 07:33 IST

    இந்தியா - சீனா இடையே திறக்கப்படும் எல்லை வர்த்தகம்

    இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல். உத்தரகாண்ட், ஹிமாச்சல், சிக்கிம் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் திறக்க உடன்படிக்கை.



  • Aug 20, 2025 07:30 IST

    சிபி ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல்

    குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் என்.டி.கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். என்.டி.ஏ கூட்டணி கட்சி எம்.பி.க்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: