Advertisment

கனிமொழி கூட்டத்தில் பெண் போலீஸிடம் அத்துமீறல்: 2 பேர் கைது; தி.மு.க-வில் இருந்து சஸ்பெண்ட்

பெண் காவலர்களிடம் தவறாக நடந்த இரண்டு உறுப்பினர்களை திமுக தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
கனிமொழி கூட்டத்தில் பெண் போலீஸிடம் அத்துமீறல்: 2 பேர் கைது; தி.மு.க-வில் இருந்து சஸ்பெண்ட்

பெண் காவலர்களிடம்  தவறாக நடந்த இரண்டு  உறுப்பினர்களை திமுக தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளது.

திமுகவின் பொதுக்கூட்டத்தில்  பாதுகாப்பு பணியில் இருந்த  பெண் காவலர்களிடம், திமுக உறுப்பினர்கள் இரண்டு பேர் தவறாக நடந்து கொண்டனர்.  சமந்தபட்ட பெண் காவலர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும் தமிழக பாஜக தலைவரும் இது தொடர்பாக கண்டனத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் இதற்கு காரணமாக இருந்த பிரவீன், ஏகாம்பரம்  ஆகியோரை அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment