/indian-express-tamil/media/media_files/6C057Lkb0Hskdt9sdgtS.jpeg)
Coimbatore
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி போட்டியிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகு திகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா, கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.
இதற்கிடைஇயே, விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
தொடர்ந்து தனியார் ஹோட்டலில் தங்கும் அவர் மாலையில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின் கொடிசியாவில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார்.
இந்த விழாவிற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. அப்பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.