Advertisment

தி.மு.க இளைஞரணி மாநில மாநாடு: '21ம் தேதி நடைபெறும்' - கட்சி தலைமை அறிவிப்பு!

'மிக்ஜம்' புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
DMK Youth  Wing state level Conference on 21 JAN Udhayanidhi Stalin Tamil News

தி.மு.க இளைஞரணியின் மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Salem: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம்  ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் 'மிக்ஜம்' புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு கடந்த 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இருப்பினும். தொடர்ந்து அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2 முறை ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, வரும் 21ஆம் தேதி நடைபெறும் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment