/indian-express-tamil/media/media_files/bMtrVQOxoSzCQ5GIeDV8.jpg)
தி.மு.க இளைஞரணியின் மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Salem:நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் 'மிக்ஜம்' புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு கடந்த 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும். தொடர்ந்து அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2 முறை ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, வரும் 21ஆம் தேதி நடைபெறும் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.