Advertisment

அரை நிர்வாண போராட்டம் வேண்டாம் ; அய்யாகண்ணுவுக்கு நீதிபதி அறிவுரை

மெரினா கடற்கரை பொதுமக்கள் வந்து செல்லும் இடம். அங்கு 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க முடியாது என்று நீதிபதி ராஜா கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ayyakkannu-determined-to-continue-with-Delhi-protests

அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Advertisment

காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வருபவர், அய்யாக்கண்ணு. இவர் டெல்லியில் 40 நடத்திய போராட்டம் வித்தியாசமானது. இப்போது சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரை பொதுமக்கள் வந்து செல்லும் இடம். அங்கு 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க முடியாது என்றும், எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து மனுதாரர் கருத்தை அறிந்து தெரிவிக்க அய்யாகண்ணு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

மேலும், டில்லியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதைப் போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அய்யாகண்ணு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி அறிவுறுத்தினார்.

Chennai High Court Cauvery Management Board Ayyakannu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment