/indian-express-tamil/media/media_files/BeruHylV6Pzn4sNhSh2B.jpg)
ஆரம்பத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் அந்த மருத்துவர் இளங்குமரன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
sexual-harassment: சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வருபவர் இளங்குமரன் (37 வயது). அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பெண் ஒருவர் கருக்கலைப்பு செய்வதற்காக தனது கணவருடன் வந்துள்ளார்.
அந்தப் பெண் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக இருந்து வரும் இளங்குமரனிடம் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இளங்குமரன். தான் மயக்க நிலையில் இருந்தபோது, இளங்குமரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புதன்கிழமை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆரம்பத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் அந்த மருத்துவர் இளங்குமரன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41 (ஏ) இன் கீழ் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், அவர் மீது இந்திய தண்டைனைச் சட்டம் பிரிவு 354 (a) மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரிடம் நடந்தது குறித்து எழுத்துப்பூர்வ எழுதி வாங்கி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.