Advertisment

கருக் கலைப்புக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் கொடுமை: சென்னை டாக்டர் மீது வழக்குப் பதிவு

சென்னை தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Doctor sexually abuse woman under anesthesia for undergoing abortion Chennai Tamil News

ஆரம்பத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் அந்த மருத்துவர் இளங்குமரன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

sexual-harassment: சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வருபவர் இளங்குமரன் (37 வயது). அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு கடந்த  செவ்வாய்க்கிழமை பெண் ஒருவர் கருக்கலைப்பு செய்வதற்காக தனது கணவருடன் வந்துள்ளார். 

Advertisment

அந்தப் பெண் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக இருந்து வரும் இளங்குமரனிடம் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இளங்குமரன். தான் மயக்க நிலையில் இருந்தபோது, ​​இளங்குமரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புதன்கிழமை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆரம்பத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் அந்த மருத்துவர் இளங்குமரன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41 (ஏ) இன் கீழ் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும், அவர் மீது இந்திய தண்டைனைச் சட்டம் பிரிவு 354 (a) மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரிடம் நடந்தது குறித்து எழுத்துப்பூர்வ எழுதி வாங்கி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sexual Harassment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment