சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் வருகைப் பதிவேடுவில் முறைகேடு நடந்துள்ளதாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில், பெண் மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வருகைப் பதிவேட்டில் ஒரே நேரத்தில் 10 நாட்களுக்கான வருகைப் பதிவு செய்யும் வீடியொ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சை ஆகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் வருகைப் பதிவை உறுதி செய்ய தமிழக அரசு பயோமெட்ரி முறையிலான வருகைப் பதிவை கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இருப்பினும், பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவே சரியாக பின்பற்றப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
அதே போல, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவு முறை சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பெண் மருத்துவர் ஒருவர் வருகைப் பதிவேட்டில் 10 நாட்களுக்கான வருகைப் பதிவை ஒரே நேரத்தில் பதிவு செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. இதனால், மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும், இந்த வீடியோவில் காட்டப்படுவதுபோல, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வருகைப்பதிவு முறைகேடு நடந்துள்ளதா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"