New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/MHC.jpg)
விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது என குடும்ப நல நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி, கருத்து வேறுபாட்டால் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். அவர்களுக்கு விசா கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர முடியாததால் அமெரிக்காவில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இதை ஏற்க மறுத்த குடும்ப நல நீதிமன்றம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் எனக் கூறி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், வாக்குமூலம் பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து மனைவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்ற வழக்குகளில் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் பிற வழக்குகள் குறிப்பாக விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வாய்பளிக்க வேண்டும் என்றும், அவர்களை நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது என்றும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரஸ்பரம் விவாகரத்து கோரிய தம்பதியரின் பொது அதிகாரம் பெற்றவர்கள் வழக்குகளை தாக்கல் செய்யலாம் எனவும், காணொலி மூலம் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.