Advertisment

தேர்தல் ஆணையம் செயலிழந்து விட்டது - டாக்டர் ராமதாஸ் காட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க-வின் அத்துமீறலையும், தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தையும் கடந்து பா.ம.க வெற்றி பெறும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ramadoss 1

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

Advertisment

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க-வின் அத்துமீறலையும், தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தையும் கடந்து பா.ம.க வெற்றி பெறும். பா.ம.க-விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், களப்பணியாற்றிய பா.ம.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மறறும் நிர்வாகிகளுக்கும் நன்றி.

கப்பியாம்புலியூரில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தொரவியில் டி.எஸ்.பி ஒருவர் தி.மு.க-வினரை கண்டும் காணாமல் இருந்து விட்டு அமைதியான முறையில் வாக்கு சேகரித்த பா.ம.க-வினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். காவல்துறையினர் தி.மு.க-வினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும் கடந்து பா.ம.க 25000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும். தமிழகத்தில் அரசியல் படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு என கேட்கும் நிலை உருவாகியுள்ளது. 

சென்னையில் காவல் அதிகாரிகள் பணிமாறுதல் செய்யப்பட்டது மட்டும் போதுமானதல்ல. இதற்கு முதல்வர் பொறுப்பேற்க  வேண்டும். 15 நாட்களுக்கு

ஒருமுறை உள்துறை மற்றும் காவல்துறையினருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள காவல் அதிகாரிதான் பொறுப்பு என அறிவிக்க வேண்டும். இதற்கு காவல் அலுவலர்கள் பற்றாக்குறையும் ஒரு

காரணம். காவலர்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் காரணம். இரண்டாம் நிலை காவலர் முதல்

தலைமை அலுவலர் வரை 1.10 காவல்துறையினர்தான் உள்ளனர். 40 ஆயிரம் காவல் பணியிடங்களை நிரப்பவேண்டும். 1 லட்சம் மக்களுக்கு 200 காவலர்களை

நியமிக்கவேண்டும். 

டி.என்.பி.எஸ்.சி-க்கு புதிய தலைவரை நியமித்து இழந்த நம்பிக்கையை மீட்கவேண்டும். தலைவர் இல்லாமல் 25 மாதங்களாக செயல்படுவது நிர்வாக கோளாறு ஆகும். தற்போது 9 உறுப்பினர்கள் உள்ளனர். பொறுப்பு தலைவர் முனியநாதன் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். எனவே, புதிய தலைவரையும், காலியாக உள்ள 7 உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தும் முறையை

நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும். கள்ளகுறிச்சி, மதுரை சிங்காநல்லூர் கொலைகளுக்கு மதுதான் காரணம். மறைமலை அடிகளாரின் 148வது

பிறந்தநாள் ஜூலை 15-ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயரை தமிழில் எழுத கட்டாயப்படுத்தவேண்டும். 

இந்திய குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத் தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கும் அரசு. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பணியை சரியாக செய்யாமல் இருக்கும் அதிகாரியை

ஓராண்டுக்கு பணி நீக்கம் செய்யவேண்டும். 

தமிழகத்தில் உளவுத்துறை எங்கே உள்ளது? ஒவ்வொரு நாளும் காலை உளவுத்துறையின் தலைவர் முதல்வரிடன் முன்னாள் நிகழ்வை விவரிப்பார். தற்போது இதை யாரிடம் சொல்வது என்று அதன் தலைவருக்கு புரியவில்லை.

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது” என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போடு, பா.ம.க மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன் 

Dr Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment