அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக பரவும் தகவல் பொய்யானது - டாக்டர் ராமதாஸ்

அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக பரவும் தகவல் பொய்யானது என்றும், திட்டமிட்டபடி இன்று பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக பரவும் தகவல் பொய்யானது என்றும், திட்டமிட்டபடி இன்று பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Dr Ramadoss

Dr Ramadoss

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பூம்புகாரில் மகளிர் மாநாடு நடத்திய டாக்டர் ராமதாஸ், பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தார்.

Advertisment

இந்நிலையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்  குறித்து திண்டிவனம் உள்ள தைலாபுரம் தோட்டத்தின் அருகே பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:

புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இந்த பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் மூலம் வதந்தி பரப்புவதாக செய்திகள் வருகிறது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மேலும், நேற்று எனது மனைவி சரஸ்வதி அம்மாளுக்கு 77-வது பிறந்தநாளை
கொண்டாடினோம். அதற்காக அன்புமணி அவருடைய குடும்பத்துடன் வந்து தாயாரிடம் ஆசி பெற்றார்.” என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Dr Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: