Advertisment

மெரினாவில் வந்திறங்கிய ஆளுநர்… ஒலித்த 'திராவிட நாடு வாழ்க' பாடலால் சர்ச்சை

ஆளுநர் வருகையின் போது திராவிட நாட்டு பாடல் பாடப்பட்டது ஏன் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது

author-image
WebDesk
Jan 31, 2022 08:53 IST
New Update
மெரினாவில் வந்திறங்கிய ஆளுநர்…  ஒலித்த 'திராவிட நாடு வாழ்க' பாடலால் சர்ச்சை

மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.

Advertisment

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்த ஆர் என் ரவி, காரிலிருந்து இறங்கும் போது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினரும், பள்ளி மாணவிகளும் பாடினர்.

அதே சமயம், முதல்வர் ஸ்டாலின் அங்கு வருகையில் `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்க’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.

இதனை சுட்டிக்காட்டி, ஆளுநர் வருகையின் போது திராவிட நாட்டு பாடல் பாடப்பட்டது ஏன் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இந்த காணொலியை சமூக வலைதளத்தில் ஷேர் செய்யும் இணையவாசிகள், தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Mk Stalin #Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment