/tamil-ie/media/media_files/uploads/2022/09/செப்.-25-ம்-தேதி-முதல்-குடிநீர்-மற்றும்-கழிவுநீர்-அகற்றும்-வரி-செலுத்தலாம்.jpg)
Chennai Tamil News: ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25ஆம் தேதி) சென்னையில் குடிநீர் வாரியத்திற்கு கட்ட வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வரியை நுகர்வோர் வசூல் மையத்திற்கு சென்று கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் அறிவித்ததாவது:
வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வரியினை அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களில் கட்டலாம்.
மேலும், செப்டம்பர் 25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை வரி செலுத்தக்கூடிய அலுவலகங்கள் இயக்கப்படும்.
நுகர்வோர் தங்களது நிலுவைத் தொகையை அரசின் வலைத்தளத்தை பயன்படுத்தி கடன் அட்டை, பற்று அட்டை, இணையதள பரிவர்த்தனை ஆகியவை மூலமாக செலுத்தலாம். அலுவலகங்களில் காசோலை மற்றும் ரொக்கப் பணம் மூலம் வரி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.