மார்ச் 4,5 தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்; சென்னை வாசிகளே உஷார்

சென்னையின் முக்கிய நகரங்களில் மார்ச் 4 மற்றும் 5 தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
water supply

மார்ச் 4,5 தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) மூலம் பிரதான குழாய் இணைப்பு பணிகள் காரணமாக மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நகரில் 15 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

குடியிருப்பாளர்கள் போதுமான குடிநீரை சேமித்து வைக்கவும், அதிகாரிகளை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் மார்ச் 5 ஆம் தேதி காலை 10 மணி வரை பணிகள் மேற்கொள்ளபடும்.

இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தேனாம்பேட்டை மண்டலம் 9, கோடம்பாக்கம் மண்டலம் 10, அடையாறு மண்டலம் 13-ல் சூளைமேடு, நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கோபாலபுரம், ராயப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடைபடும். 

முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அவசர காலங்களில், மாநகராட்சியின் https://cmwssb.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் டேங்கர்கள் மூலம் தண்ணீரைப் பெறலாம் என்றும் கூறியுள்ளது.

Advertisment
Advertisements

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் குறைந்த அழுத்தமுள்ள பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மற்றும் தெரு குழாய்கள் மூலம் தண்ணீர் கிடைக்கும், மேலும் நீர் விநியோகம் வழக்கம் போல், முறையான முறையில் எந்த இடையூறும் இல்லாமல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Water

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: