ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு பயிற்சி: கோவை மாநகர காவல் துறை ஆணையர்
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கண்காணிப்பதற்கும் குற்ற புலனாய்வுகள் செய்வதற்கும் ட்ரோன் கேமராக்கள் இயக்குவதற்கு கூடுதலான போலீசாருக்கு பயிற்சி வழங்க இருப்பதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கண்காணிப்பதற்கும் குற்ற புலனாய்வுகள் செய்வதற்கும் ட்ரோன் கேமராக்கள் இயக்குவதற்கு கூடுதலான போலீசாருக்கு பயிற்சி வழங்க இருப்பதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Advertisment
கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு டி.ஜி.இன்ஸ்டியூட் ஆஃப் ட்ரோன்ஸ் சார்பாக இரண்டு நாள் பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது.
ட்ரோன் கேமராக்களை சரியான முறையில் இயக்குவதற்கும்,அது தொடர்பான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதற்கும் மாநகரில் உள்ள இருபது காவலர்களுக்கு தேர்ந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு கோவை காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.
Advertisment
Advertisement
முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது : கோவை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்காணிப்பதற்கு ட்ரோன் கேமராக்கள் அதிக அளவில் பயன்படுவதாக குறிப்பிட்டார்.மேலும் தற்போதைய நவீன தொழில் நுட்பத்தில் ட்ரோன் கேமரா பயன்பாடு காவல் துறையில் அதிகரித்து வருவதால் இது தொடர்பான பயிற்சிகளை இன்னும் கூடுதல் காவலர்களுக்கு வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news