/indian-express-tamil/media/media_files/R9vWmnHh7bBMHie7WVtI.jpg)
புதுக்கோட்டை மாவட்டத்தில், இறால் பண்ணையில் 100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப் பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணுறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த இடத்தில் 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப் பொருள் மற்றும் 874 கிலோ எடையுள்ள கஞ்சா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.110 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப்பொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இந்த போதை பொருட்கள் முழுவதும் ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.