கோவை அரசு மருத்துவமனை முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய போதை நபர் தற்கொலைக்கு முயல்வதாக கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர்.
தொடர்ந்து அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய நபரின் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
எனினும் அந்த நபர் யார், எந்த ஊர்யை சேர்ந்தவர் என்பது போன்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“