/tamil-ie/media/media_files/uploads/2019/09/beach-1.jpg)
TN Live updates : Dirtiest railway station in India
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான வழித்தடத்தில் நாளை (29ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெறுவதால் 36 புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாளை (செப்; 29) காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன. இதனால், மேற்கண்ட நேரங்களில் புறநகர் ரயில்களின் சேவை இருமார்க்கத்திலும் நிறுத்தப்படுகிறது. மொத்தம் 36 புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. பிற்பகல் 2 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும், 2.10 மணிக்கு வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கும் முதல் ரயில் சேவை புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.