முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையிலும் பின்னர் சென்னை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், பிசியோதெரபி சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறு மாத சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வந்தார். பின்னர் அங்கிருந்து கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் தனது அக்கா அஞ்சுக செல்வியை பார்த்தபோது தனது மனைவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். ஓராண்டுக்குப் பிறகு தனது கணவர் துரை தயாநிதியின் புகைப்படத்தை அவரது மனைவி அனுஷா முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த பிறகு அழகிரி மற்றும் துரை தயாநிதியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“