Advertisment

சின்னம் பிரச்சனை இல்லை, 24 மணி நேரத்தில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் - துரை வைகோ

சின்னம் பிரச்சனை இல்லை, ம.தி.மு.க சின்னத்தை 24 மணி நேரத்தில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Durai Vaiko

திருச்சி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. இங்கு தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக ம.தி.மு.க அறிவித்திருந்த நிலையில், தங்களுக்கு பம்பரம் சின்னம் வழங்கவேண்டும் என அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கேட்கப்பட்டிருந்தது.

Advertisment

அங்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. அங்கு பம்பரம் சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், அதனை ஏற்று வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்த நிலையில், பா.ஜ.க-விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என ம.தி.மு.க சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,  “சின்னம் விவகாரத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றால் அவரின் சின்னம் என்ன என்பதை தேடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 24 மணி நேரம் கூட தேவைப்படாது.

பா.ஜ.க வை உண்மையாக எதிர்க்கும் அணியாக தி.மு.க அணி இருக்கிறது. திருச்சியில் அந்த அணி சார்பில் ம.தி.மு.க போட்டியிடுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.க-விற்கு ஆதரவாக இருக்கிறது.

தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் கொடுத்து விட்டோம்.ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள். ம.தி.மு.க, வி.சி.க மட்டுமல்ல நாம் தமிழர் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கவில்லை. பா.ஜ.க-வை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் இருக்க கூடாது என்பதற்காக பா.ஜ.க-விற்கு ஆதரவாக தேர்தல் ஆனையம் செயல்படுகிறது.

அ.தி.மு.க பதட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சின்னமே முடங்க வாய்ப்பிருக்கிறது. எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பா.ஜ.க-விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை கொண்டு எதிர் கட்சிகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்கள்" என தெரிவித்தார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Durai Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment