Advertisment

பரபரப்பான தேர்தல் முடிவுகள் வெளிவரும் நேரத்தில் துரைமுருகன் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
duraimurugan admitted in apollo

duraimurugan admitted in apollo

duraimurugan admitted in apollo: தமிழக ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் நாளான இன்று காலை முதல் பரபரப்பான தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் திமுக முன்னிலையில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நேரத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக தி.மு.க பொருளாளர் துரைமுருகன் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வகையில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது.

திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமானவர் என்றால் அவர் திமுக பொருளாளர் துரைமுருகன் தான்.சமீபத்தில் துரைமுருகன் கொடுத்த பரபரப்பு பேட்டியில் மே 23 க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாறும் என்று உறுதியாக கூறியிருந்தார்.தேர்தல் முடிவு வெளிவரும் இன்று துரைமுருன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dmk Durai Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment