/tamil-ie/media/media_files/uploads/2023/08/Durga-Stalin-at-Guruvayoor.jpeg)
குருவாயூர் கோவிலில் துர்கா ஸ்டாலின்: தங்க கிரீடம் வழங்கிய வண்ணப் படங்கள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலுக்கு தங்க கீரிடம் வழங்கியதோடு, சந்தனம் அரைக்கும் இயந்திரத்தையும் வழங்கினார்.
இதையும் படியுங்கள்: குருவாயூர் கோவிலுக்கு 32 பவுனில் தங்க கிரீடம்: துர்கா ஸ்டாலின் காணிக்கை
கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பலமுறை தரிசனம் செய்ய சென்று வந்துள்ளார். இந்தநிலையில், குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இன்று 14 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க கிரீடத்தை துர்கா ஸ்டாலின் வழங்கினார். இந்த தங்க கிரீடம் 32 பவுன் எடை கொண்டது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-10-at-19.46.57-1.jpeg)
கீரிடம் மட்டுமல்லாமல் சந்தனம் அரைக்கும் இயந்திரத்தையும் துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோவிலுக்கு வழங்கினார். இயந்திரத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். முன்னதாக கிரீடம் தயாரிப்பதற்கான அளவு, கோவிலில் இருந்து வாங்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.