Advertisment

திருமண மண்டபத்திற்கு என்.ஓ.சி வழங்க ரூ.20,000 லஞ்சம்; துணை தாசில்தார் தப்பியோட்டம்; வி.ஏ.ஓ கைது

திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க ரூ.20,000 லஞ்சம்; கைது செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை தாசில்தார் தப்பியோட்டம்

author-image
WebDesk
New Update
perambalur tahsildar vao

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக அகிலா மஹால் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று பெறுவதற்காக திருமண மண்டபத்தின் மேலாளர் துரைராஜ் பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

Advertisment

மனுவினை விசாரித்த துணை தாசில்தார் பழனியப்பன் தடையின்மை சான்று வழங்குவதற்காக 20,000 லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பமில்லாத துரைராஜ் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனையின் நேற்று இரவு 6.45 மணியளவில் மண்டப மேலாளர் துரைராஜ் பெரம்பலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று துணை தாசில்தார் பழனியப்பன் கூறியதன்பேரில் அங்கிருந்த கீழக்கரை வி.ஏ.ஓ நல்லுசாமியிடம் 20 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென தாலுகா அலுவலகத்தில் உள்ளே சென்று லஞ்சம் பெற்ற இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ஹேம சித்ரா வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த துணை வட்டாட்சியர் பழனியப்பன் இன்று தப்பி ஓடிவிட்டார். இவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

bribe Perambalur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment