ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு; ரூ.1 லட்சம் பறிமுதல்

திருச்சி மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்; அலுவலர்களிடம் தொடர் விசாரணை

திருச்சி மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்; அலுவலர்களிடம் தொடர் விசாரணை

author-image
WebDesk
New Update
Trichy RTO

திருச்சி மேற்கு மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் பொது மக்களிடம் அவர்களது பணிகளை செய்து கொடுப்பதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் நேற்று (29.07.2025) திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி, பாலமுருகன் மற்றும் விஜிலென்ஸ் குழுவினர் மற்றும் ஆய்வுக்குழு அலுவலர் ராம லக்ஷ்மி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் அலுவலகத்தில் இருந்தும் மற்றும் இரண்டு புரோக்கர்களிடம் இருந்தும் ரூபாய் மொத்தம் ரூ.1,06,000 கைப்பற்றப்பட்டது. 

இது தொடர்பாக பணியில் இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர், மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

க.சண்முகவடிவேல்

Trichy bribe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: