திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வெட்டி கொலை

அவர்களுக்கும் அசோக்கும் விரோதம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். 

அவர்களுக்கும் அசோக்கும் விரோதம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ashok murdered

திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அசோக். 23 வயதாகும் இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பொருளாளராக இருந்தார். நேற்று இரவு 10: 30 மணியளவில் இவரை மர்ம கும்பல் ஓட ஒட விரட்டி வெட்டி கொலை செய்தது. இதையறிந்த அசோக்கின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரை- நெல்லை நெடுஞ்சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் நெல்லை - மதுரை சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல் ஆணையர் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக அசோக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்றனர்.

Advertisment
Advertisements

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு பைக்கில் வந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அசோக்கின் தாயாரை மோதியிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அசோக்கும் விரோதம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

Thirunelveli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: