மதுரையில் மீண்டும் 2-வது முறையாக ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மக்கள் அச்சம்

மதுரையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல், இமெயில்களால் பொது மக்களிடையே அச்சம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல், இமெயில்களால் பொது மக்களிடையே அச்சம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
bomb threat

மதுரையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல், இமெயில்களால் பொது மக்களிடையே அச்சம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த திங்கட்கிழமை பள்ளிகளுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று மதுரையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

மதுரையில் கடந்த திங்கட்கிழமை நரிமேடு பகுதியிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திர வித்யாலயா மற்றும் மதுரை பொன்மேனி ஜீவனா ஸ்கூல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு  வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் அனுப்பப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதிலும் சோதனை நடத்தினர். இதில், எந்த வெடிகுண்டு பொருட்களும் சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் மதுரையில் உள்ள சில விடுதிகளுக்கு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரை சின்னசொக்கிக்குளம் பகுதியில் உள்ள ஜேசி ரெஸிடென்ஸி, விமான நிலைய சாலையில் உள்ள அமீகா ஹோட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரை ரெஸிடென்ஸி, காளவாசல் அருகே உள்ள ஹோட்டல் ஜெர்மானஸ் உள்ளிட்ட  ஐந்து நட்சத்திர ஓட்டங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இருப்பினும், மதுரையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல், இமெயில்களால் பொது மக்களிடையே அச்சம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: