Advertisment

இ.பி- ஆதார் இணைக்க ரெடி ஆகிட்டீங்களா? இன்று முதல் சிறப்பு முகாம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க தமிழகம் முழுவதும் மின் வாரிய அலுவலகங்களில் இன்று முதல் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Aadhaar card

Aadhar card

தமிழகத்தில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயம்,

கைத்தறி, விசைத்தறி போன்ற தொழில் துறைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து துறை பயனர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

Advertisment

இந்தநிலையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் இன்று (நவம்பர் 28) முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சசர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. 2,811 மின்வாரிய பிரிவு மையங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது மின் நுகர்வோர் அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று இணைத்துக் கொள்ளலாம். அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உள்பட காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நேரடியாக மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று ஆதார் எண் இணைக்கலாம். அல்லது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாகவும் இணைத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மின் இணைப்பு எண்- ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment