Advertisment

10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது... உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆர்.எஸ்.பாரதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இப்படியானதொரு ஒதுக்கீடு என குற்றச்சாட்டு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019 Live Updates: ஓட்டப்பிடாரம் தொகுதி வழக்கு தள்ளுபடி! தேர்தல் மீண்டும் நடத்தப்படுமா?

Election 2019 Live Updates: ஓட்டப்பிடாரம் தொகுதி வழக்கு தள்ளுபடி! தேர்தல் மீண்டும் நடத்தப்படுமா?

Economically backward upper castes 10% reservation : 2018ம் ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடரில் அதி தீவிரமாக விவாதங்கள் உருவாக்கியது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு அளிக்கப்பட்ட 10% இட ஒதுக்கீடு.  பெரும் கூச்சல் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

Advertisment

பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 10% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 10% இடஒதுக்கீடானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று திமுக சார்பில், அக்கட்சியின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இப்படியானதொரு ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு.. வரும் கல்வியாண்டில் அமல்!

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment