விசாரணையை தீவிரப்படுத்தும் இ.டி: டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மீண்டும் சம்மன்

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை புதன்கிழமை காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை புதன்கிழமை காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ED again summons TASMAC officials Tamil News

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை புதன்கிழமை காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடப்​ப​தாக​வும், இதில் வரி ஏய்ப்​பு, சட்​ட​விரோத பண பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக​வும் அமலாக்​கத் துறைக்கு புகார்​கள் சென்​றன. 

Advertisment

இதன் அடிப்​படை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் நிறுவன தலைமை அலு​வல​கம், அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் உள்ள டாஸ்​மாக் குடோன், அப்​போது அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி​யின் நண்பர் வீடு, அலு​வல​கங்​கள், தி.மு.க எம்​.பி.ஜெகத்​ரட்​சக​னின் அக்​கார்டு மது​பான உற்​பத்தி நிறு​வனம், எஸ்.என்​.ஜே கால்​ஸ், எம்.​ஜி.எம் உள்​ளிட்ட மது​பான உற்​பத்தி நிறு​வனங்​கள், அதன் ஆலைகளில் அமலாக்​கத் துறை கடந்த மார்ச் மாதம் தீவிர சோதனை நடத்​தி​யது.

சென்​னை, கரூர், கோவை, விழுப்​புரம், புதுக்​கோட்டை என 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு மது​பானங்​கள் கொள்​முதல் செய்​தது, பார் உரிமம் வழங்​கியது, மது​பானங்​களை மது​பான கடைகளுக்கு கொண்டு செல்​வதற்​கான போக்​கு​வரத்​துக்கு டெண்​டர் வழங்​கியது உள்​ளிட்​ட​வற்​றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத்துறை அறிக்கை வெளி​யிட்​டது.

இதையடுத்து, அமலாக்​கத்துறை சோதனை நடத்​தி​யது சட்​ட​விரோதம் என அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மற்றும் டாஸ்​மாக் நிர்​வாகம் சார்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​ததால், உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மேல்​முறை​யீடு செய்​துள்ளது. 

Advertisment
Advertisements

இந்த சூழலில், சென்னை மணப்​பாக்​கம் சி.ஆர்​.புரத்​தில் உள்ள டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநர் விசாகன் வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்​தினர். அப்​போது, ரூ.1,000 கோடி முறை​கேடு தொடர்​பான பல முக்​கிய ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றிய​தாக கூறப்​பட்டது. தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநர் விசாக​னிட​மும், அவரது மனை​வி, மகனிட​மும் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். 

இதேபோல, சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் வீடு உள்பட மேலும் 7 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை டாஸ்மாக் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் ஜோதி சங்கர் என்பவரை அழைத்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜோதி சங்கரிடம் காலையில் இருந்து மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைக்கேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை (புதன்கிழமை) காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tasmac Enforcement Directorate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: