கோவை கோட்டைமேடு பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று (செப்.13) இரவு 8.30 மணியளவில் கட்சி அலுவலகம் வந்த 10க்கும் மேற்பட்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisment
அமலாக்கத்துறை சோதனை செய்யும் தகவல் அறிந்து 100க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டர்கள் அலுவலகம் முன் திரண்டு அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து கோஷம் எழுப்பினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட சோதனைக்குப் பின் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். சோதனையின் முடிவில் ஆவணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பாதுகாப்பிற்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.