/indian-express-tamil/media/media_files/ktLAqQk94Zh5UExlxm3e.jpeg)
திருச்சி சின்னக் கடை வீதி ,பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
5 கார்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நள்ளிரவு முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பத்திற்கு மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை வைத்து இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
இவர்கள் சிறு கடைகளை வைத்துக்கொண்டு வேறு எதுவும் தொழிலில் முதலீடு செய்து உள்ளார்களா? இவர்களுடைய முக்கிய பிரதான தொழில் வேறொன்று உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ங்களில் மணல் குவாரிகளில் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று சென்னையில் அந்த முதன்மை நீர் வளத்துறை பொறியாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இதுமட்டுமின்றி சென்னையில் உள்ள பிரபல நகை கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று திருச்சியில் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் உள்ள சிறிய சிறிய நகைக் கடைகளின் மூலம் வேறு தொழிலில் முதலீடு செய்து வருகிறார்களா? அல்லது மணல் குவாரியுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? அதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் திருச்சி சின்ன கடைத் தெருவு மற்றும் பெரிய கடைத்தெரு வீதிகளில் அதிக அளவு நகை கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையால் அப்பகுதியில் உள்ள மற்ற நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சோதனையின் முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.