Advertisment

விசாரணைக்கு ஆஜராகக் கூடாது... துரைமுருகன் உதவியாளர் நிர்பந்தம்... அதிகாரி வாக்குமூலம் - இ.டி தகவல்

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நிர்பந்தித்ததாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஐகோர்ட்டில் இ.டி மனுவில் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
ED Madras HC

விசாரணைக்கு ஆஜராகக் கூடாது... துரைமுருகன் உதவியாளர் நிர்பந்தம்... அதிகாரி வாக்குமூலம் - இ.டி தகவல் 

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நிர்பந்தித்ததாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளது.

Advertisment

சட்ட விரோதமாக மணல் எடுத்தது தொடர்பாக அமலாக்கத்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறையில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்த வாக்குமூத்தை அமலாக்கத்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும், அந்த மனுவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டதாகவும் நீர்வளத்துறைக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டும்கூட, இதுவரைக்கும் யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜரான நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாகிவிட்டதாகவும் பிறகு, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானபோது, திருவள்ளூர் மாவட்ட நீர்வளத் துறை செயற்பொறியாளர் பொதுப் பணித் திலகம் என்பவர் தன்னை தொடர்புகொண்டு வீட்டை விட்டு வெளியேறி செல்போனை அனைத்து வைத்துவிடும்படி அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை  செயலர் சந்தீப் சக்சேனா அறிவுறுத்தியதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி, அமலாக்கத்துறை விசாரணை ஆஜராக வேண்டாம் என்று மறைமுகமாக தெரிவித்ததாகவும் அதையும் மீறித்தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்ததாக அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்த மேலும் பல அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்படுவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அழுத்தம் கொடுத்ததால்தான் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மேல் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத மணல் கொள்ளையை அனுமதித்ததன் மூலம் தாங்கள் தவறு செய்துவிட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதுடன் இந்த மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக அமலாக்கத்துறை மனுவில் தெரிவித்துள்ளது. 

உரிமம் பெற்றிருக்கக்கூடிய 28 சுரங்கங்களிலும் அமலாக்கத்துறை நிபுணர் குழுவினருடன் ஆய்வு நடத்தியதில், அதிக அளவில் மணல் எடுத்ததன் மூலமாக 4 ஆயிரத்து 7 நூற்று 30 கோடி ரூபாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் மணல் மாஃபியாக்கள் மூலமாக அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், அது சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுடைய பெயரைக் குறிப்பிடவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment