Advertisment

ரூ 81.7 லட்சம் ரொக்கம், ரூ 13 லட்சம் வெளிநாட்டு கரன்சி, ரூ 41.9 கோடி டெபாசிட்... பொன்முடி வீட்டில் ரெய்டு பற்றி இ.டி அறிக்கை

அமைச்சர் பொன்முடியின் ரூ.41.9 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
ED Freezes RS 41 9 Crore Assets Of Tamil Nadu Minister

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூலை 17) சோதனை நடத்தினார்கள்.

இந்தச் சோதனையானது சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீடுகள் உள்பட 7 இடங்களில் நடந்தது.

Advertisment

இந்தச் சோதனையின் நிறைவில் பொன்முடி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் செல்லப்பட்டார். நள்ளிரவிலும் அவரிடம் விசாரணை நடந்தது.

தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது அவரிடம் இன்று மதியம் 4 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அமைச்சர் பொன்முடியின் ரூ.41.9 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “சோதனையின் போது, பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள், ₹ 81.7 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு நாணயம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) தோராயமாக ₹ 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.41.9 கோடி நிலையான வைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Ponmudi Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment