தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குச் சொந்தமான அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: தி.மு.க பிரமுகர் வீடு, போதை மறுவாழ்வு இல்லம்… கோவையில் 2-வது நாளாக ஐ.டி ரெய்டு
சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னனி படத்தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அதேநாளில் கல்லல் குரூப் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குச் சொந்தமான உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தநிலையில், உதயநிதி அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அறக்கட்டளை வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil