Advertisment

உதயநிதி அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி அசையா சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத் துறை நடவடிக்கை

உதயநிதி அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை; வங்கி கணக்கில் உள்ள ரூ.34.7 லட்சமும் முடக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Udhayanidhi Kiruthiga

உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குச் சொந்தமான அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Advertisment

இதையும் படியுங்கள்: தி.மு.க பிரமுகர் வீடு, போதை மறுவாழ்வு இல்லம்… கோவையில் 2-வது நாளாக ஐ.டி ரெய்டு

சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னனி படத்தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அதேநாளில் கல்லல் குரூப் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குச் சொந்தமான உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில், உதயநிதி அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அறக்கட்டளை வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment