Advertisment

லேப்டாப்பில் சிக்கிய முக்கிய ஆவணம்: இ.டி அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு தள்ளுபடி

லஞ்சம் வாங்கிய போது பிடிபட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Dindigul TN DVAC arrested ED officer Ankit Tiwari tamil news

திண்டுக்கலைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவரின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க, அவரிடம் இருந்து மதுரை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம்  லஞ்சம் வாங்க முயன்ற போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 

Advertisment

இதையடுத்து அங்கித் திவாரி ஜாமீன் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அங்தித் திவாரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது கண்டறியப்படும்.

அங்கித் திவாரி மடிக்கணினியில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கி உள்ளது. அதில், தமிழகத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கி உள்ள 75 பேரை, பெயருடன் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

இந்த நிலையில் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை நிராகரித்தும் மனுவை தள்ளுபடி செய்தும் இன்று உத்தரவு பிறப்பித்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment