Advertisment

லஞ்ச விவகாரத்தில் மதுரை போலீஸ் சம்மன்: காலம் தாழ்த்தும் அமலாக்கத் துறை

அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 11 மணிக்குள் ஆஜராகுமாறு மதுரை போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர்களது தரப்பில் எந்த அதிகாரியும் ஆஜராகாவில்லை

author-image
WebDesk
New Update
 ED officials fail to appear Madurai Tallakulam police station after summons Tamil News

மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும், டி.எஸ்.பி சத்யசீலன் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அமலாக்கத் துறையினருக்கு எதிராக ஒரு புகாரை கொடுத்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Madurai | enforcement-directorate: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் சொத்து குவிப்பு வழக்கு குறித்து விசாரிக்காமல் தவிர்க்க, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 1ம் தேதி கைது செய்தனர். 

Advertisment

அதே நாளில், லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரியின் உத்தரவின்பேரில் மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையும் நடத்தினர். மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் போலீசார் சென்றபோது, அவர்களை அமாலாக்கத் துறையினர் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்.

புகார் 

இந்நிலையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு அனுப்பிய புகாரில், ‘மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனக் கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடி சென்றவர்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். 

அதே நேரத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும், டி.எஸ்.பி சத்யசீலன் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அமலாக்கத் துறையினருக்கு எதிராக ஒரு புகாரை கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக அதிகாரிகளை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் (பெயர் குறிப்பிடாமல்) மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இது தொடர்பாக அமலாக்கத் துறையினருக்கும் சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் மாறி, மாறி புகார்கள் அளிக்கப்பட்டதால் விசாரணையை தல்லாகுளம் போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

சம்மன் 

மதுரை தல்லாகுளம் போலீசார் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத் துறையினருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஆஜராகி தங்களது தரப்பு வாக்குமூலம் பதிவு செய்தனர். ஆனால், அமலாக்கத் துறை தரப்பில் இதுவரை யாரும் ஆஜராகவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 11 மணிக்குள்  ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர்களது தரப்பில் எந்த அதிகாரியும் ஆஜராகாவில்லை. இரண்டாவது சம்மன் அனுப்புவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க உள்ளதாக ல்லாகுளம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Madurai Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment