/indian-express-tamil/media/media_files/X2yoqC9TYXQnF6Rd7XOA.jpg)
மணல் ஒப்பந்தார கரிகாலன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னையில், மணல் ஒப்பந்தார கரிகாலன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ. 2.50 கோடி பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சட்டவிரோத மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக சண்முக ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர் செல்வம், கரிகாலன் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள சி.ஐ.டி நகரில் மணல் ஒப்பந்ததாரர் கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை (14.02.2024) அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், அவரது உறவினர் அருண் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பு, அமலாக்கத்துறை சோதனையின்போது, கரிகாலன் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றதால், அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் சீல் அகற்றப்பட்டு இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.