கதிர் ஆனந்த் எம்.பி பொறியியல் கல்லூரியில் 44 மணி நேர இ.டி ரெய்டு நிறைவு: துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்

எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் சுமார் 44 மணி நேரமாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் துரைமுருகண் டெல்லி புறப்பட்டார்.

எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் சுமார் 44 மணி நேரமாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் துரைமுருகண் டெல்லி புறப்பட்டார்.

author-image
WebDesk
New Update
raid

அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கிய சோதனை 44 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. 

Advertisment

எட்டு கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

சோதனையை தொடர்ந்து கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை சார்ந்த ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் ஜனவரி 3 ஆம் தேதி காலை சோதனையை தொடங்கினர். 

Advertisment
Advertisements

மேலும் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் 2 நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. ஜன.3 முதல் நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை சுமார் 44 மணிநேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.

8 கார்களில் வந்திருந்த 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டனர்.

கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறையினர் ரெய்டு முடிந்ததையொட்டி அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

ed raid Duraimurugan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: