Advertisment

ஞாயிற்றுக் கிழமையும் டூட்டியை விடாத இ.டி: புதுக்கோட்டை மணல் குவாரிகளில் ரெய்டு

தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ், அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டதில், சட்டவிரோத மணல் அள்ளல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

author-image
WebDesk
New Update
Sand Mafia

சமீபத்தில் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத மணல் அகழ்வு வழக்குகளின் விவரங்களை அமலாக்கத் துறை கோரியுள்ளது.

ED raids in Pudukkottai sand quarry: தமிழகத்தில் ஆற்று மணல் அகழ்வு மற்றும் விற்பனையில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குனரகம் தொடர் விசாரணை நடத்திவருகிறது.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை பெருநாவலூரில் உள்ள அரசு மணல் குவாரியில இன்று இ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

Advertisment

அப்போது, சமீபத்தில், மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத மணல் அகழ்வு வழக்குகளின் விவரங்களை அமலாக்கத் துறை கோரியது.

தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ், அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டதில், சட்டவிரோத மணல் அள்ளல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தமிழக அரசு மணல் குடோன்களில் போலி ரசீதுகள் வழங்கி அதிக அளவில் மணல் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில், பணமோசடி கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pudukottai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment