/tamil-ie/media/media_files/uploads/2023/05/sent.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் மற்றும் சென்னை வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் (ஜுன் 13) திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.
மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பணப் பரிவர்த்தனை தொடர்பாக தகவல் பெற வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் 3 அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் 2 வங்கி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2011 முதல் 2016 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்வரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக செந்தில் பாலாஜிக்கு சொந்தாமான இடங்கள் அவர்களது உறவினர், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் வேலை மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.