/indian-express-tamil/media/media_files/maCmmxgfuckzHTdsoZP3.jpg)
இ.பி.எஸ்
தேனி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 82 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர், தஞ்சாவூர் கிழக்கு உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் – எஸ். ராமச்சந்திரன், திருநெல்வேலி புறநகர் மாவட்டம் – இசக்கி சுப்பையா , கன்னியாகுமாரி கிழக்கு மாவட்ட செயலாளர்- தளவாய்சுந்தரம் , பெரம்பலூர் – முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் , தஞ்சாவூர் மேற்கு - எம். ரெத்தினசாமி, மத்திய திருவண்ணாமலை - எல். ஜெயசுதா, தஞ்சாவூர் கிழக்கு- ஆர்.கே பாரதி மோகன், தேனி மேற்கு - எஸ். டி. கே. ஜக்கையன் ஆகியோர் மாவட்டசெயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிமுகவில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 82 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.