/indian-express-tamil/media/media_files/2025/11/02/eps-meeting-2025-11-02-20-32-32.jpg)
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணித்து விவரங்களை அளிக்க வேண்டும் என அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எஸ்.ஐ.ஆர் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கண்காணிப்பது குறித்து இ.பி.எஸ் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நவம்பர் 4-ம் தேதி தொடங்க உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என அ.தி.மு.க ஐடி பிரிவு பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் இ.பி.எஸ் அறிவுறுத்தினார்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்காணிக்க வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ் அறிவுறுத்தினார்.
அதோடு, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணித்து விவரங்களை அளிக்க வேண்டும் என அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us