டெல்லி சென்ற அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 1 மணி நேரத்துக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழ்மை (25.03.2025) திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் அ.தி.மு.க மூத்த தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சென்றனர். பின்னர், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை இரவு அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வையும் போர்த்தினார். இதைத் தொடர்ந்து இருவரும் 1 மணி நேரத்துக்கு மேலாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் சென்றிருந்த மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்கள் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். இதேபோன்று கட்சியின் முக்கிய தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.
தமிழக மன்றத் தேர்தல் 2026-ல் நடைபெற உள்ள சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.