/tamil-ie/media/media_files/uploads/2023/04/eps-tamil-magan-hussai-car.jpg)
அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய ‘மஹிந்திரா ஸ்கார்பியோ’ கார் வழங்கினார்.
அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய ‘ஸ்கார்பியோ’ கார் வழங்கினார். அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இருந்தபோது, கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் வழங்கினார். அதற்கு பிறகு, இப்போது, தமிழ்மகன் உசேனுக்கு இ.பி.எஸ் கார் வழங்கியுள்ளார்.
அ.தி.மு.க அவைத் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழ்மகன் உசேன் இருந்து வருகிறார். நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின், அ.தி.மு.க பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் வழங்கியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (16.04.2023) கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான தமிழ்மகன் உசேன், கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, கழகத்தின் சார்பில் ‘TN 06 AD 5666’ என்ற பதிவு எண் கொண்ட ‘Mahindra Scorpio’ புதிய வாகனத்தை வழங்கி, தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க அவைத் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழ்மகன் உசேன் இருந்து வருகிறார். நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின், அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் வழங்கியிருப்பதன் முலம், அவருக்கு ‘லக்’ அடித்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.