/indian-express-tamil/media/media_files/2025/05/21/Ot49opSfgZSrLJZl72JN.jpg)
"யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே உங்கள் ஆட்சியில் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக இருக்கும் பாலியல் "சார்"-களை எப்போது கன்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
"யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே உங்கள் ஆட்சியில் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக இருக்கும் பாலியல் "சார்"-களை எப்போது கன்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
"யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே உங்கள் ஆட்சியில் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக இருக்கும் பாலியல் "சார்"-களை எப்போது கன்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.
பொம்மை முதல்வர் மு.க ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது. இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல்-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே உங்கள் ஆட்சியில் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக இருக்கும் பாலியல் "சார்"-களை எப்போது கன்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்?. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 9, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.