/indian-express-tamil/media/media_files/2025/10/30/edappadi-k-palaniswami-reaction-ops-and-sengottaiyan-travelling-in-same-car-tamil-news-2025-10-30-15-45-56.jpg)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் வலியுறுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தனர். ராமநாதபுரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/d00e2b90-18c.jpg)
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிசாமி உடன் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் ஓ.பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு "தெரியவில்லை, வந்தால்தான் தெரியும்" என்று அவர் பதிலளித்தார்.
மேலும் பேசிய அவர், "தேவர் ஐயா தேசியத்தையும் தெய்வீகத்தையும் இணைத்த வாழ்க்கை வாழ்ந்த மகானர். ஏழைகளுக்காக தன் நிலங்களை தானமாக வழங்கிய கொடை வள்ளல். அ.தி.மு.க சார்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் பாரத ரத்னா வழங்க மனு கொடுத்துள்ளோம்." என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us