/indian-express-tamil/media/media_files/2025/09/08/eps-campaign-2-2025-09-08-06-43-30.jpg)
எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பேசுகையில், “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்டத்தில், சின்னாளப்பட்டி, ஆத்தூர் ஒட்டன் சத்திரம் ஆகிய இடங்களில் பிரச்சார பயணம் மேற்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பேசுகையில், “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு பா.ஜ.க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். மேலும், தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அளித்தவர் ஜெயலலிதா என்பதையும் பழனிசாமி நினைவு கூர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க-வை நிறைய பேர் உடைக்கப் பார்க்கிறார்கள். கட்சியை யாராலும் கட்சியை உடைக்க முடியாது. அ.தி.மு.க-வை எவ்வளவோ பேர் முடக்க பார்க்கிறார்கள். தொண்டர்கள் துணையுடன் தவிடுபொடி ஆக்குவேன்” என்று கூறினார்.
மேலும், “தமிழகத்தில் கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. கஞ்சாவுக்கு அடிமையாகி மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.