Advertisment

டெண்டர் முறைகேடு வழக்கு: இ.பி.எஸ் கோரிக்கையை ஏற்று தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்

முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
டெண்டர் முறைகேடு: இ.பி.எஸ் மீதான வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரிக்க உத்தரவு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்தார்.

Advertisment

அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்வராகப் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “முதல்வராகப் பதவி வகித்த பழனிசாமி மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த புகார் குறித்து சிபிஐ விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு வழக்கறிஞர் ரஞ்சித்குமார் திங்கள்கிழமை முறையீடு செய்தார். இதை ஏற்றுகொண்ட கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கு விரைந்து பட்டியலிடப்படும் என உறுதி அளித்தது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவிட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi K Palaniswami Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment